ugc
nirf

தமிழகப் பெண்கள் செயற்களம், சென்னை நடத்திய “கலக்க வராங்க பசங்க” எனும் தமிழ்ப் பண்பாட்டுக் கலை நிகழ்ச்சியில் அனைத்து கல்லூரிகளுக்கு இடையேயான கலைப் போட்டியில் தஞ்சை பாரத் அறிவியல் நிர்வாகவியல் கல்லூரியின் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு இரண்டாம் பரிசு பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை கல்லூரியின் நிர்வாக இயக்குநர் மற்றும் செயலாளர் திருமதி. புனிதா கணேசன் அவர்கள் பாராட்டினார்.