ugc
nirf

செப்டம்பர் 11, 2024

தஞ்சை பாரத் அறிவியல் நிர்வாகவியல் கல்லூரியில் (தன்னாட்சி) மகாகவி பாரதியாரின் நினைவு நாளை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் உள்ள பாரதியார் திருவுருவ சிலைக்கு கல்லூரியின் நிர்வாக இயக்குநர் & செயலாளர் திருமதி. புனிதா கணேசன் அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் அவர் பாரதியார் பற்றிய பல தகவல்களை பற்றி மாணவர்களுக்கு உரையாற்றினார். இந்த நிகழ்வில் கல்லூரியின் இயக்குநர் முனைவர். த. வீராசாமி, முதல்வர்‌ முனைவர் க. குமார், கல்லூரி உள்தர உறுதி பிரிவின் இயக்குநர் திரு. ம. சுகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் இரா. அறவாழி, துணை முதல்வர் திருமதி. இராஜராஜேஸ்வரி மற்றும் பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் பாரதியாரின் திருவுருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வு‌ தமிழ் துறை மற்றும் உள்தர உறுதி கட்டுப்பாட்டு பிரிவோடு இணைந்து நடத்தப்பட்டது. இந்த நிகழ்வை தமிழ் துறைத்தலைவர் முனைவர். ம. சதானந்தம் மற்றும் துறை பேராசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.